6TH TAMIL NOTES OF LESSON- SEPTEBER 1ST WEEK

 6TH TAMIL NOTES OF LESSON- SEPTEBER 1ST WEEK

6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு



நாள்        : 05-09-2022 முதல் 09-09-2022        
மாதம்    :   செப்டம்பர்         
வாரம்     :   முதல் வாரம்                                               
வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :   1.மொழி முதல்,இறுதி எழுத்துகள்

1.கற்றல் நோக்கங்கள்   :


  • தமிழில் பிழையின்றி எழுதுதல்


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:


  •  வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்



3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :


யாருக்கெல்லாம் தமிழில் பிழையில்லாமல் எழுதும் ஆசை  உள்ளது? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து, பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             


  • இலக்கண விளக்கப் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.


5.மனவரைபடம்  :





6.தொகுத்தலும்,வழங்குதலும்:


  • உயிரெழுத்துகள் 12 ம் சொல்லின் முதலில் வரும்.
  • மெய்யெழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,ங,ஞ,ய,வ ஆகியன் சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் ஆகும்
  • ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய மெய்கள் சொல்லின் முதலில் வராது.
  • ஞ,ண,ந,ம,ய,ர,ல,வ,ழ,ள,ன ஆகிய மெய்கள் சொல்லின் இறுதியில் வரும்

7.வலுவூட்டல்:


     விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:


எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

 1.மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துகள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துகளைச் சான்றுடன் விளக்குக.

9.குறைதீர் கற்றல்:


மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:


 பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி


மொழிக்கு முதலிலும்,இறுதியிலும் வரும் மெய்யெழுத்துகளுக்குச் சான்றுகளை எழுதி  தொகுத்துவரச் செய்தல்

 12.கற்றல் விளைவு:


தமிழில் பிழையின்றி எழுதுதல்

Post a Comment

0 Comments