8TH TAMIL LESSON PLAN JULY WEEK 4

 8TH TAMIL LESSON PLAN JULY WEEK 4


  8..ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு



நாள்        : 25-07-2022 முதல்  29-07-2022        
மாதம்     :    ஜூலை          
வாரம்     :   நான்காம் வாரம்                                               
வகுப்பு  :  எட்டாம் வகுப்பு          
 பாடம்    :           தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :  1.வினைமுற்று (கற்கண்டு)
                                            2.திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

 வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  •  எழுவாய் செய்யும் செயலைக்குறிப்பது வினைச்சொல் என்று நீங்கள் அறிவீர்கள். 
  •  முடிவு பெற்ற வினைச்சொல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :          
   

  • வினைமுற்று வகைகள்
  • தெரிநிலை வினைமுற்று,குறிப்பு வினைமுற்று
  •  ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று
  • நன்னனின் குடிமக்கள் கூத்தர்களை விருந்தோம்பும் முறை
  •  நடுவுநிலைமை,கூடா ஒழுக்கம்,கல்லாமை,குற்றங்கடிதல்,இடனறிதல்


5.ஆசிரியர் செயல்பாடு 
             :

  • வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
  • வினைமுற்று வகைகளை உரிய சான்றுகளுடன் நயம்பட விளக்குதல்
  • நிகழ்காலச் சான்றுகளுடன் திருக்குறள் கருத்துகளை விளக்குதல்.


6.கருத்துரு வரைபடம்:






7.மாணவர் செயல்பாடு:

  • வினைமுற்றுச் சொற்கள் மற்றும் அதன் வகைகளைப் பயன்படுத்தும் முறையை அறிதல்
  • நிகழ்காலச் சான்றுகளுடன் ஒப்பீடுசெய்து புரிந்துகொள்ளுதல்
  • திருக்குறளின் மேன்மையறிந்து வாழ்வில் கடைபிடித்தல்


8.வலுவூட்டல்:

விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

  1. வினைமுற்று என்றால் என்ன?
  2. வினைமுற்று------வகைப்படும்
  3.  உலகப்பொதுமறை எது?


10.குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
  •  நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

Post a Comment

0 Comments