6TH TAMIL NOTES OF LESSON AUGUST 1 WEEK

 6TH TAMIL NOTES OF LESSON  AUGUST 1 WEEK


  6. ஆம் வகுப்பு தமிழ்- பாடக்குறிப்பு

நாள்        : 01-08-2022 முதல் 05-08-2022        
மாதம்       :    ஆகஸ்டு          
வாரம்     :   முதல் வாரம்                                               
வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          
 பாடம்    :     தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :   அறிவியல் ஆத்திசூடி (கவிதைப்பேழை)


1.கற்றல் நோக்கங்கள்   :

 எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

யாருக்கெல்லாம் அறிவியல் அறிஞர் ஆகவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து, பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.


5.மனவரைபடம்  :




6.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • ஆத்திச்சூடியின் முன்னோடி ஔவையார் ஆவார்
  •  ஆத்திச்சூடி என்பது அகரவரிசையில் அறிவுறைகளைச் சொல்லும் இலக்கியம்.
  •  இப்பாடலை இயற்றியவர் நெல்லை சு.முத்து ஆவார்
  • இவர் விண்வெளி மையங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்
  • எதையும் காரண காரியத்துடன் அறிந்து கொள்ள முயல வேண்டும் என இப்பாடலில் வலியுறுத்துகிறார்


7.வலுவூட்டல்:


     விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

        1.ஔடதம் என்பதன் பொருள் என்ன?
        2.உடல் நோய்க்கு------தேவை.

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.எது வெற்றி தரும்?
2.அறிவியல் எப்போது வெல்லும் ?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.ஔடதமாம் அனுபவம்-விளக்குக.
2.ஏன் என்று கேள் என்று கவிஞர் கூறக் காரணம் யாது?

9.குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

 அறிவியல் சிந்த்னையைத் தூண்டும் முழக்கத்தொடர்கள் ஐந்தினை உருவாக்குக.

 12.கற்றல் விளைவு

எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலுதல்


Post a Comment

0 Comments