பள்ளிக் கல்வித் (அ.தே) துறை
அரசாணை எண். 54 நாள் 09.06.2020
திருவள்ளுவர் ஆண்டு 2051
சார்வரி வருடம் வைகாசி 27
பள்ளிக்
கல்வி - அரசு தேர்வுகள் இயக்ககம் -
2019-20 ஆம்
கல்வியாண்டு
- 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு (விடுபட்ட பாடங்கள்) பொதுத் தேர்வுகள் ரத்து செய்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.
படிக்கப்பட்டவை:-
1. அரசு
கடித (நிலை) எண்.45, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்
12.05.2020.
2. அரசு
கடித (நிலை) எண்.46, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள்
19.05.2020.
3. மாண்புமிகு
முதலமைச்சர்
அவர்களின்
09.06.2020 நாளிட்ட
அறிக்கை.
ஆணை
மேலே
முதலாவதாகப்
படிக்கப்பட்ட
அரசு கடிதத்தில்
2019-20 ஆம்
கல்வியாண்டிற்கு01.06.2020
முதல் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு (விடுபட்ட பாடங்களுக்கு) பொதுத் தேர்வுநடத்துவதற்கும்,
12ம் வகுப்பில்
24.03.2020 அன்று
நடைபெற்ற தேர்வினை எழுதாதமாணவர்களுக்கு
மறுதேர்வு நடத்துவதற்கும் திருத்திய கால அட்டவணைக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டு அரசு தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
2. தற்போது
நிலவி வரும் கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக மேற்படி பொதுத்தேர்வுகள் நடத்துவதை தள்ளி வைக்கக் கோரி பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்துபெறப்பட்ட
கோரிக்கைகளை
கருத்தில்
கொண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம்வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களுக்கான (
(1). வேதியியல்,
கணக்கு பதிவியல், புவியியல்(புதிய பாடத்திட்டம்)
(() வேதியியல்,
கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி கணக்குபதிவியல்
(பழைய பாடத்திட்டம்) )
பொதுத் தேர்வுகளையும்,
12ம் வகுப்பிற்கு
24.03.2020 அன்றுநடைபெற்ற
தேர்வினை எழுதாத மாணவர்களுக்கு நடத்தவிருந்த மறுதேர்வினையும்,15.06.2020
முதல் நடத்திட மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசு கடிதத்தில்ஆணையிடப்பட்டது.
3. இந்நிலையில்,
சென்னை உயர்நீதி மன்றத்தில் இது சார்ந்து வழக்குகள்தொடரப்பட்டு, மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போதுகொரோனா தொற்றுஅதிகமாக உள்ள நிலையில் தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்றுகேட்டுக்கொண்டுள்ளது.
. 4, மேலே மூன்றாவதாக
படிக்கப்பட்ட
அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளவாறு,
இது குறித்துஅரசு விரிவாக ஆய்வு செய்து, தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்றுசென்னையிலும்,
சில மாவட்டங்களிலும்
தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், நோய் தொற்று வல்லுநர்கள்,
நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என்று கருத்துதெரிவித்துள்ளதாலும்,
பெற்றோர்களின்
கோரிக்கைகளையும்,
நோய்தொற்றின்
தற்போதையபோக்கையும்
கருத்தில்
கொண்டு, மாணவர்களை நோய்த் தொற்றிலிருந்து காக்கும் பொருட்டுஅரசு பின்வருமாறு ஆணையிடுகிறது.
(i) 2019-20ஆம் கல்வியாண்டில்,
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பில்விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் (புதியபாடத்திட்டம்,
வேதியியல்,
கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்விகணக்கு
பதிவியல்
(பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றிற்கானபொதுத்
தேர்வுகள்ரத்து செய்யப்படுகிறது.
(i) இந்த தேர்வுகள்
ரத்து செய்யப்பட்ட காரணத்தால் 10ம் வகுப்பு மற்றும் 11ம்வகுப்பில் விடுபட்ட பாடங்களில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்றவர்களாகின்றனர்.
(14) மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின்அடிப்படையில் 80
சதவிகித மதிப்பெண்களும்,
மாணவர்களின்
வருகைபதிவின்
அடிப்படையில்
20 சதவிகித
மதிப்பெண்களும்
வழங்கப்படும்.
(14)12ம் வகுப்பு
தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே
24.03.2020 அன்று
நடைபெற்றதேர்வினை
எழுதாத மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த
மறுதேர்வுஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், சூழ்நிலைக்கேற்ப
12ம் வகுப்பிற்கானமறுதேர்வுக்கான
நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆளுநரின் ஆணைப்படி)
தீரஜ் குமார்
அரசு முதன்மைச்
செயலாளர்.
0 Comments